தூத்துக்குடியில் வெறிச்செயல்; கல்லறை தோட்டத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக் கொலை; போலீசார் வலைவீச்சு..!
Unidentified Youth Hacked to Death in Cemetery in Thoothukudi
தூத்துக்குடியில் இரவில் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை நண்பர்களுக்கிடையே போதை தகராறில் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, முல்லை நகர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தூத்துக்குடி சிப்காட் போலீசுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சடலமாக கிடந்த வாலிபரின் கழுத்து மற்றும் தாடைப்பகுதியில் வெட்டுக் காயங்களுடன் கிடந்துள்ளார். அவரது உடல் அருகே காலி மதுபாட்டில்கள் மற்றும் வாட்டர் பாட்டில்கள் ஆகியவை கிடந்ததுள்ளன. இதனால் இறந்த நபர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இறந்து கிடந்த வாலிபர் குறித்த விபரம் தெரியாத நிலையில், மோப்பநாய் ‘ஜிஒ’ வரவழைக்கப்பட்டது. அப்போது அந்த மோப்பநாய் வாலிபர் இறந்து கிடந்த இடத்திலிருந்து கல்லறை தோட்டத்தின் நுழைவு வாயில் வரை சென்று நின்று விட்டதோடு, யாரையும், யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இதனால், கல்லறை தோட்டத்தின் வாசலில் இருந்து கொலையாளிகள் காரில் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த கல்லறை தோட்டம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான செம்பார்க் உள்ளதால், இந்த பார்க்கில் உள்ள சிசிடிவி கேமிராக்களை சிப்காட் போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Unidentified Youth Hacked to Death in Cemetery in Thoothukudi