#திருவள்ளூர் || இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கோவில் தெருவை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சரவணனும்(16), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சிவகுமாரும்(14) ஒரே இருசக்கர வாகனத்தில் சீதஞ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து சென்னை பெரம்பூர் மங்கலாபுரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அம்மம் பாக்கம் மதுக்கடை அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheelers accident in tiruvallur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->