இருசக்கர வாகனம் இது ஜேசிபி மோதி விபத்து.! கூலி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தின் மீது ஜேசிபி மோதி விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர்களது மகன் கூலி தொழிலாளி ஹரிகிருஷ்ணன்(30) மற்றும் கவுதம் (29).

இவர்கள் இருவரும் வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஜேசிபி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் ஹரிகிருஷ்ணன் மற்றும் கௌதம் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler JCP accident in salem


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->