இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்த சேர்ந்தவர் ராசுகுட்டி. இவர் மதுரையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில், சிவகங்கையில் இருக்கும் மனைவி கலைச்செல்வியை பார்ப்பதற்காக நேற்று இருசக்கர வாகனத்தின் சென்றார்.

அப்பொழுது சிவகங்கை அருகே உள்ள நல்லாகுளம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ராசுகுட்டி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராசு குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler government bus accident


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->