புளிய மரத்தின் மீது இருசக்கர வாகன மோதி விபத்தில் ஒருவர் பலி.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் புளிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அணு ஆராய்ச்சி மைய ஊழியர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிற்றரசு(41). இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இவர் அணுபுரம் சென்று விட்டு திருக்கழுகுன்றம் சாலை வழியாக வெங்கம்பாக்கம் பகுதி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிற்றரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், உயிரிழந்த சிற்றரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twowheeler collided with a tamarind tree in Chengalpattu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->