இருசக்கர வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.! இளைஞர் பலி.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் குமலம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் பசுபதி (26). இவர் கோட்டகுப்பம் பகுதியில் உள்ள பால் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பசுபதி குமலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் அனுமந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது மஞ்சங்குப்பம் அருகே சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பசுபதி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பசுபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டகுப்பம் காவல்துறையினர், பசுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler ambulance accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->