இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (42). இவர் பண்ருட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன்(27) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வளைவில் திரும்பியபோது ஒரகடம் நோக்கி அஸ்வின் குமார்(25) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், படுகாயமடைந்த அஸ்வின் குமார் மற்றும் பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Twowheeler accident in kanchipuram


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->