#தூத்துக்குடி || மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய இளைஞர்கள்.! 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிய இளைஞர்கள், ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நண்பர்களான மாரிமுத்து, ஜெபசிங் மற்றும் மாரிமுத்து ஆகிய 3 பேரும் டிஎம்பி காலனியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிறகு தூத்துக்குடியில் உள்ள மூணாவது மையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நிலையில் போதை அதிகமானதால் மூவரும் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கி உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடியில் புதிய துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி சென்ற ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி உள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்த நிலையில் ஜெபசிங் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two person died in drunken sleep on railway tracks


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->