கோவிலுக்குச் சென்றபோது நேர்ந்த கொடூரம் - மரத்தில் கார் மோதி தாய், மகன் பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் குளத்துப்பாளையம் அணைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் யோகரத்தினம் - ஆஷா தம்பதியினர். இவர்களுக்கு அனுப்ராஜா, அபிலேஸ்வரன் என்ற மகன்களும், அஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், ஆஷா கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் உள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலுக்கு இன்று காலை குழந்தைகளுடன் திருப்பூரில் இருந்து காரில் புறப்பட்டார். இந்தக் காரை திருப்பூர் பவானி நகரை சேர்ந்த விமல்ராஜ் என்பவர் ஓட்டினார். இவர்கள் திருப்பூரில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி வழியாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அதன் படி இந்தக் கார் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தாபுரம் சாலை பாப்பாத்தி பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த ஆஷா மற்றும் அவரது மகன் அனுப்ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், அபிலேஸ்வரனுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயத்துடன் காரில் இருந்த அபிலேஸ்வரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குச் செல்லும் பொது விபத்துக்குள்ளாகி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died for accident in tirupur


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->