அதிகாலையிலேயே அதிர்ச்சி - கார் பேருந்து நேருக்கு நேர் மோதல் - 2 பேர் பலி; 20 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் உளுந்துர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக . 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு. இடியாப்ப வியாபாரியான இவர் தனது குடும்பத்தாருடன் நேற்று இரவு சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கார் அப்பளம் போன்று நொறுங்கியதால், அதில் பயணம் செய்த அழகுராசுவின் மனைவி ஜெயா மற்றும் மூத்த மகள் வசந்தி உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், அழகுராசு மற்றும் அவரது இளைய மகள் வைதேகி உள்ளிட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல், கார் மீது மோதிய வேகத்தில் சுற்றுலா பேருந்தும் பள்ளத்தில் கவிழ்ந்தால், அதில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died and peoples injured for accident in vilupuram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->