பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - புகாரில் சிக்கிய தந்தை மகன்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்புக்காக புகார் பெட்டி அமைக்கப்பட்டது. 

அந்தப் பெட்டியில், மாணவி ஒருவர் தான் வசிக்கும் பகுதியிலேயே பாலியல் தொந்தரவு நடந்ததை மனுவாக எழுதி போட்டுள்ளார். இந்த மனுவை தலைமையாசிரியர் பரிசீலனை செய்து, சம்பவம் குறித்து திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். 

அந்தப் புகாரின் படி, போலீசார் விசாரணை நடத்தியதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றும் 65 வயதான ராசு, அவரது 38 வயது மகன் முருகேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போலீசாரின் நடவடிக்கைகளால், மாணவியின் நலம் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for harassment in sivakangai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->