இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாணவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்து உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கட்டாம்பட்டியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் பூவரசன்(16). இவர் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் பூவரசன் சேக்கண்ட அள்ளி பகுதியில் நடந்த கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பூவரசன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட பூவரசன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக தர்மபுரி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two motorcycle accident in dharmapuri


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->