அரசு மருத்துவமனையில் திடீர் மோதல் - உளுந்தூர் பேட்டையில் பரபரப்பு.!!
two gangs attack in ulunthurpettai government hospital
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த மோதல் காரணமாக அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பலரும் அவதி அடைந்தனர். இந்த மோதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருதரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. தொடர்ந்து போலீசார் இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் மோதல் காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
two gangs attack in ulunthurpettai government hospital