அர்ஜென்டினா அணியின் கேரளா பயணம் ஒத்திவைப்பு; மெஸ்ஸியாவது வருவாரா? மீண்டும் ஏமார்ந்த ரசிகர்கள்..!
Argentina teams trip to Kerala postponed
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அடுத்த மாதம் கேரள வருவதாக இருந்த நிலையில் இந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி உடன் நட்பு ரீதியிலான போட்டியில் அர்ஜெண்டினா அணி, விளையாட இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது.
பிஃபாவின் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடுவதற்காக கேரளாவுக்கு அர்ஜெண்டினா அணி அடுத்த மாதம் வருவதாக கேரள அரசு, இந்த போட்டியின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார். அத்துடன், அர்ஜெண்டினா அணி தரப்பிலும், கடந்த ஆகஸ்ட் மாதம் மெஸ்ஸியும் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் போட்டி பிஃபாவின் நட்பு ரீதியிலான சர்வதேச அணிகளுக்கான அடுத்த அட்டவணையில் நடைபெறும் என போட்டியை ஏற்பாடு செய்துள்ள ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஆண்டோ அகஸ்ட்டின் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்தப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான அனுமதியை பிஃபா தரப்பில் இருந்து பெறுவதற்கு காலதாமதமாகி வருவதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அர்ஜெண்டினா கால்பந்து அணி நிர்வாகத்துடன் பேசி உள்ளதாகவும், இந்தப் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கொச்சியில் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று கடந்த ஆண்டு அர்ஜெண்டினா அணி கேரளாவில் விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் அறிவித்தார். அப்போது முதலே அர்ஜெண்டினா அணி இந்த போட்டியில் விளையாடுவதில் குழப்பம் நீடித்தது. கேரள அரசு தரப்பு, போட்டியின் ஏற்பாட்டாளர், அர்ஜெண்டினா அணி நிர்வாகம் முரணான கருத்தை மாறி மாறி தெரிவித்ததால், அந்த போட்டியும் ரத்தானது.
இந்நிலையில், வரும் டிசம்பரில் 04 நாட்கள் மெஸ்ஸி இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பயணத்தில் ஆவர், கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லிக்கு அவர் செல்லவுள்ளதோடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இந்தப் பயணத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Argentina teams trip to Kerala postponed