17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன் கைது...!
Tutorial teacher who sexually abused a 17 year old girl
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டுடோரியல் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியில் டுடோரியல் நடத்தி வருபவர் லோகநாதன். இவரின் டுடோரியலில் எண்ணமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் படித்து வந்தார்.
இந்நிலையில், அந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அவரின் பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 3 மாதம் கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
17 வயதே ஆன மகள் கர்பமாக இருப்பதால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுமியிடம் இது பற்றி கேட்டுள்ளனர். அப்போது, சிறுமி தெரிவித்ததை கேட்டு மேலும், அதிர்ச்சியடைந்தனர். டுடோரியலில் படித்து வந்த போது தேர்வில் தேர்ச்சியடைய வைப்பதாக கூறி லோகநாதன் அத்துமீறலில் ஈடுப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tutorial teacher who sexually abused a 17 year old girl