#BREAKING: திருச்சியை சேர்ந்த ரவுடி துரை போலீசாரின் என்கவுண்டரில் படுகொலை! - Seithipunal
Seithipunal


திருச்சியை சேர்ந்த ரவுடி துரை, புதுதிக்கை அருகே போலீஸீரின் என்கவுண்டரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போது போலீஸாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதில் ரவுடி துரை என்கவுண்டரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி துரை மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை, வம்பன் காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இன்று அவரை பிடிக்க சென்றுள்ளனர்.

ரவுடி துரையை போலீசார் பிடிக்க முயன்ற போது, போலீசாரை ரவுடி துரை தாக்கியதாகவும், பாதுகாப்புக்காக போலீசார் அவரை நோக்கி துப்பாக்கிகள் சுட்டதாகவும் முதல் கட்டத்தை தகவல் வெளியாகி உள்ளது. 

சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது நான்கு கொலை வழக்குகள் உட்பட 70 வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy Rowdy Durai death in police shoot


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->