பட்ஜெட் நகலை எரித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் ஒன்றிய நிதி நிலை அறிக்கையை எதிர்த்து  பட்ஜெட் நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பார்ட்டத்தில்  ஈடுபட்டனர்.

2025 பிப்ரவரி 1-இல் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர் நலன் பாதுகாப்பதற்கான திட்டங்கள் சம்பந்தமாக, அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றப் போவதில்லை என்பதை அமைச்சருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை உறுதி செய்துள்ளது.

மேலும், தொழிலாளர் நலன்களை நிதி மூலதனத்திற்கு அடிமையாக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக மாநில அரசுகளுக்கு நெருக்கடி அளித்து வருகிறது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் நிதிநிலை அறிக்கையில் உழைக்கும் மக்களைக் கொள்ளையடிக்கும் அதே கார்ப்பரேட்களுக்கு மட்டுமே சேவை செய்யும் கொள்ளைகள் தொடருகிறது.

மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. தொழிலாளர்களின் நலன் முற்றாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, புதுச்சேரியில் ஒன்றிய நிதி நிலை அறிக்கையை எதிர்த்து  பட்ஜெட் நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பார்ட்டத்தில்  ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trade unions burn copies of budget


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->