கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை.. 5மாத கர்ப்பிணிக்கு கருகலைப்பு மருந்து கொடுத்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


வரதட்சனை கொடுமையால் பெண் காவலருக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புலியூர் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் வனக்காவலர் ஆக பணியாற்றி வரும் பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு 25 பவுன் நகையும் 5 லட்சம் பணமும் கூடுதல் வரதட்சணையாக தர வேண்டும் என கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கு அந்தப் பெண் மறுக்கவே தினமும் அவரை பல வகையில் சித்திரவதை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், 5 மாத கர்ப்பிணியான அவருக்கு கட்டாயப்படுத்தி கசாயம் போன்ற கருக்கலைப்பு மருந்தை கொடுத்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உண்மை என்பதை கண்டறிந்தனர்.  

இதனை அடுத்து கணவர் சரவணன் அவரது தாயார் மல்லிகா மற்றும் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து கணவர் மற்றும் மாமியார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சனை கொடுமையால் பெண் கருக்கலைப்பு மருந்து கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Torture asking for extra dowry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->