நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?  - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 

இதனால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 4 மாவட்டங்களுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் மழை பாதிப்பு எதிரொலியால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், செங்கல்பட்டு உள்பட 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெள்ள பாதிப்பு காரணமாக திருவள்ளூரில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 தாலுகாகளின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow which districts schools and colleges holiday 


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->