நாளை இந்த மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Tomorrow local holiday for erode district
ஈரோடு மாவட்டத்திற்கு நாளை (ஆகஸ்ட் 3ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217 வது நினைவுநாளை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருடைய உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு நாளை (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) அவருடைய நினைவு நாள் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அதனால் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) விடுமுறை என்பதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள் கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow local holiday for erode district