தமிழகத்தில் நாளை இந்த 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Tomorrow local holiday for 3 districts
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி மார்ச் 4 ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வரும் மார்ச் 4ம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 12 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow local holiday for 3 districts