தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடை மூடல்-அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் நாமக்கல் மாவட்டங்களில் இன்று மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (ஜனவரி 18-ம் தேதி) வடலூர் ராமலிங்க அடிகளார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக் கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக் கூடங்கள் அனைத்தும் இன்று மூடப்படுகிறது.

மேலும், இன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது அந்தந்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today tasmac closed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->