#சற்றுமுன் | டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப்-1 நிலையில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது.

18 துணை கலெக்டர்கள், 
26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 
13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 
25 வணிகவரி உதவி ஆணையர், 
7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 
3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 92 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்வு சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத  3,22,414 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,90,957 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 1,31,457 பேர் தேர்வு எழுத வரவில்லை. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளன.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 1 Exam Result 2023


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->