#BREAKING || வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட தமிழக அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் "சென்னையில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அதிகப்படியான ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் கட்டாயம் செயல்பட வேண்டும். இந்த நாட்களிலும் வாகன ஓட்டுனர் உரிமம் வழங்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஓட்டுநர் பள்ளி உட்பட அனைத்து வகை பொதுமக்களையும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt orders RTO office to operate on Saturdays


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->