அரையாண்டு விடுமுறை : மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 15-ந்தேதி முதல் 1-12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு தொடங்கியது. அதில் 6, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15-ந்தேதி தொடங்கிய, அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்த ஆண்டு அட்டவணையில், டிசம்பர் 23-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அந்த அறிவிப்பின் படி, அரையாண்டு தேர்வை எழுதி முடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும், இந்த பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு அசைமென்ட்டுகளை மட்டும் வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn education department special classes to not conducted for students


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->