கலைஞர் நினைவிடம் திறப்பு விழா - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு.!
tn cm mk stalin invite opposition party for kalaingar memorable place open function
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
பின்னர் கடந்த 19-ம் தேதி 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார். இதில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியானது.
மேலும், 20-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, வருகிற 26-ந்தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது. சிறப்பு விழாவாக கொண்டாட விரும்பவில்லை. நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்துள்ளோம். அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 26-ம் தேதி இரவு 7 மணிக்கு திறக்கப்படும்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி, தோழமைக் கட்சி என அனைத்துக்கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
tn cm mk stalin invite opposition party for kalaingar memorable place open function