ஆசைக்கு ஒருவன்.. பாட்டுக்கு ஒருத்தன்.. வாழ்க்கைக்கு ஒருத்தன்.. விதி யாரை விட்டது.. அகப்பட்ட கர்ப்பிணி தப்பித்த சம்பவம்..!!
Tiruvannamalai illegal affair history girl escape
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 41). இவர் கட்டிடத்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், சுரேஷுக்கு, கிருஷ்ணவேணி என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சுரேஷிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கிருஷ்ணவேணி சுரேஷுடன் தொடர்பை துடித்துள்ளார்.
இதன்பின்னர், வீட்டிற்கு அருகே சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்த அஜித்குமார் என்பவரை கிருஷ்ணவேணி காதலித்து வந்த நிலையில், சுரேஷ் தினமும் மது போதையில் கிருஷ்ணவேணியின் இல்லத்திற்கு வந்து திருமணம் செய்ய கூறி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் சுரேஷை அடித்து கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் அஜித்தை கைது செய்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணவேணி - சென்னையை சார்ந்த கோபி (வயது 27) என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். கிருஷ்ணவேணி தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், ஆரணியில் உள்ள உறவினரை பார்க்க வந்த சமயத்தில், சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணவேணியை கைது செய்து பெண்கள் தனிசிறையில் அடைத்தனர்.
தற்போது கிருஷ்ணவேணி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 7 ஆம் தேதி அனுமதியாகவே, கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றவர், மாற்று உடையணிந்து தப்பி சென்றுள்ளார். இவரை மருத்துவமனை வளாகத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், இது குறித்து வேலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruvannamalai illegal affair history girl escape