திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் ஶ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் இன்று வெகுவிமரிசியாக நடைபெற்றது.இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரசித்திபெற்ற திருவள்ளூர் ஶ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய சிகர  நிகழ்ச்சியான  தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருத்தேர் வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில்  தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளினார்.

அதனை தொடர்ந்து காலை 7.30 மணியளவில் தேரடியிலிருந்து புறப்பட்ட தேர், பணக்கல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக காலை 9.30 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.அப்போது பலர் திருத்தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு, 'கோவிந்தா... கோவிந்தா..' என்று பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழா பாதுகாப்புப் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvallur Veeraraghava Perumal Temple


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->