அட கடவுளே!மனவிரக்தியால் பூச்சி மருந்தை பருகிய பெண்கள்...! நடந்தது என்ன?
women who drank pesticide out of frustration What happened
கன்னியாகுமரியில் தக்கலை அருகேயுள்ள பத்மநாபபுரம், முடக்குளத்தை சேர்ந்தவர் 'மோகன் நாயர்' என்பவர். இவரது 67 வயதான மனைவி 'அம்பிகா' மற்றும் இவரது மகள் 40 வயதான மாலினி என்பவரும் வாழ்ந்து வந்தனர்.இதில் மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு திருச்செந்தூர் வந்து, நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
அந்த இடத்தில் வைத்து குளிர்பானத்துடன் கலந்து பூச்சிக்கொல்லி மருந்தை இருவரும் குடித்துள்ளனர்.அப்போது வாந்தி வரவே, விடுதி ஊழியரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
women who drank pesticide out of frustration What happened