ரெயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை: நடந்தது என்ன? 
                                    
                                    
                                   tirupur railway station police search
 
                                 
                               
                                
                                      
                                            வருகின்ற மக்களவைத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுகின்றனர். 
இந்நிலையில் பயணிகள் மூலம் ரயில்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாருடன் இணைந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       tirupur railway station police search