அலைபாயுதே பாணியில் மேரேஜ்.. எல்லாம் முடிந்தவுடன் கலீஜ்.. திருப்பூரில் பரபரப்பு சம்பவம்.!!
Tiruppur girl suicide attempt due to love failure
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியை சார்ந்தவர் முத்துச்செல்வி (வயது 23). இதே பகுதியை சார்ந்தவர் தீபக் (வயது 26). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டிற்கு தெரியாமல் திரைப்பட பாணியில் திருமணம் செய்துகொண்டு, அவரவர் இல்லத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக முத்துசெல்வியிடம் பேசுவதை தீபக் குறைத்து வந்த நிலையில், தீபக்கின் நடவடிக்கையில் முத்துசெல்விக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்று காவல் துறையினர் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த விசாரணைக்கு பின்னர் முத்துச்செல்வி மற்றும் தீபக்கின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவே, தீபக் திடீரென முத்துலெட்சுமியுடன் சேர்ந்து வாழ இயலாது என்று கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான முத்துச்செல்வி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று விஷம் குதித்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த முத்துசெல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறவே, உடனடியாக காவல் துறையினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்பின் முத்துசெல்வியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடவே, மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் விஷயத்தை கேட்டறிந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tiruppur girl suicide attempt due to love failure