முன்னாள் அமைச்சருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்! பின்னணியில் அதிர்ச்சி தகவல்.!
Andhra ex minister house bomb blasting
ஆந்திரா, பிரகாசம் மாவட்டம் ஓங்கோலுவில் உள்ள முன்னாள் அமைச்சர் சித்தா ராகவாராவ் வீட்டின் முன்பு மருமநகர் ஒருவர் இரண்டு கடிதங்களை வீசி சென்றுள்ளார்.
அதனை பிரித்து பார்த்தபோது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றால் 7 கோடி தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமைச்சர் குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடிகுண்டு நிமிடங்களில் உதவியுடன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆனால் வீட்டில் எங்கும் வெடிகுண்டு இல்லாததால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். இது குறித்து வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வீசியவர் அடையாளம் காணப்பட்டதை எடுத்து உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Andhra ex minister house bomb blasting