உடல் முழுவதும் காயத்துடன் பிணமாக மீட்கப்பட்ட சிறுமி.. திருவாரூரில் பரபரப்பு.!!
thiruvarur girl sexual abuse murder police investigation going on
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் மகிழஞ்சேரி கிராமத்தை சார்ந்தவர் செந்தில் குமார். இவர் விவசாயியாக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்.
சிறுமி மவுனிகா பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அரசு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில், சிறுமி அங்குள்ள வீட்டின் பின்புறம் இருக்கும் வயல் வெளியில் பிணமாக கிடந்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
thiruvarur girl sexual abuse murder police investigation going on