திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்: சிறப்பு ரயில்கள் இயக்கம்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் கூடுதலான வருகையை நினைவில் கொண்டு தெற்கு ரயில்வே சார்பில் விழுப்புரம் – காட்பாடி இடையே மே 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக திருச்சி கோட்ட மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிரிவலப் பெருமனைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில் (06104) காட்பாடியில் நள்ளிரவு 12.50க்கு சேரும். மறுமுனையில் காட்பாடியில் இருந்து மே 12,13 ஆம் தேதிகளில் 1.20 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரத்தில் 4.25 மணிக்கு அடையும் (06103).

மேலும், விழுப்புரத்திலிருந்து முற்பகல் 11.05 மணிக்கு புறப்படும் ரயில் (06102), காட்பாடியில் பிற்பகல் 2 மணிக்கு வந்து சேரும். அதேபோல், பிற்பகல் 2.35 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்படும் ரயில் (06101), மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

இவை அனைத்தும் 8 பெட்டிகளுடன் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, வேலூர் ஆகிய இடங்களில் நின்று பயணிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai paurnami girivalam


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->