#திருவாரூர் | பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற புல்லிங்கோக்கள் கைது! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே பேருந்து நிலையத்தில் ஒரு கிலோ கஞ்சா விற்பனை செய்த இளைஞரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கையை தமிழக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கஞ்சாவிற்கும் வியாபாரிகள் சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவிற்கும் வியாபாரிகள், கஞ்சா  பயன்படுத்துபவர்களை போலீசார் தேடி, தேடி கைது செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பவர்களை பிடிப்பதற்கு போலீஸ் தீவிர சோதனையில் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சோதனையின் போது, கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 19 வயது தொல்காப்பியன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார், அவரின் நண்பரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruthuraipoondi ganja case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->