#திருப்பூர் : மர்ம உறுப்பை துண்டித்து.. கொள்ளை.! அதிர்ச்சி சம்பவம்.!
Thiruppur men attacked theni men
தேனி மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கி இருந்து கொண்டு கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில், சொந்த ஊருக்குச் செல்ல திருப்பூரிலிருந்து அரசு பேருந்தில் பயணித்து இருக்கின்றார்.
அப்போது, அவருக்கு அருகில் வேறொரு நபர் இருந்தார். பயணம் செய்த போது, அருணுக்கும் அந்த நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கண்டித்து பார்த்த பேருந்தின் நடத்துனர் அவர்கள் இருவரையும் பாதி வழியிலேயே இறக்கி விட்டுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கிய நபர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்ட நிலையில் உடன் வந்த நபர் அருணின் மர்ம உறுப்பை வெட்டி வீசியுள்ளார். இந்த விஷயம் போலீசுக்கு தெரிய வர அவர்கள் அருணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர் அருணின் செல்போன் மற்றும் ₹.4000 பணம் உள்ளிட்டவற்றை பிடுங்கி சென்றது தெரியவந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
English Summary
Thiruppur men attacked theni men