திருப்பத்தூரில் தவறான சிகிச்சை முறையால் 8 பேர் பலி! அதிரவைக்கும் காரணம்!
Thirupathur Dental Hospital 8 people death
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குழு விசாரணை நடத்தியது.
விசாரணையில், பல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் முறையாக சுத்தம் செய்யப்படாததுடன், ஒரே கருவி பல நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக 10 பேர் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
English Summary
Thirupathur Dental Hospital 8 people death