அரசு அலுவலர்கள் பணியாளர்கள் கட்டாயம் தலைகாசம் அணியவேண்டும்.. தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு!
Government officials must wear headgear as per the order of the District Collector of Dharmapuri
இனிவரும் காலங்களில் இருசக்கர வாகனங்களில் அரசு அலுவலகத்திற்கு வரும் அனைத்து துறையின் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தலைகாசம் அணிந்து சாலை பாதுகாப்பு விதி முறையினை கடைபிடிக்க வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் தலைமையில் தொடர் முடிய அலுவலகங்களுடன் மாதாந்திர சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் இனிவரும் காலங்களில் இருசக்கர வாகனங்களில் அரசு அலுவலகத்திற்கு வரும் அனைத்து துறையின் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தலைகாசம் அணிந்து சாலை பாதுகாப்பு விதி முறையினை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளுக்காக வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தலை கவசம் அணிந்து வருவதோடு சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அலுவலகங்களுக்கு வரும் அலுவலர் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தலைகாவசம் அணிந்து வருவதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் பொறுப்பு அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து தர்மபுரி மாவட்டத்தினை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
English Summary
Government officials must wear headgear as per the order of the District Collector of Dharmapuri