கனமழை மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வந்தது.

இந்தநிலையில், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிவிப்பில், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முதல் கனமழை பெய்வதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல என தெரிவித்துள்ளனர்.

அதே போல, அரியலூர், திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிக்கையில், கனமழை பெய்வதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiree district schools holiday


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->