தேனி இரட்டை கொலை! ராணுவ வீரரின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது! அதிர்ச்சி பின்னணி!
Theni double murder case
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நிலத்தகராறு காரணமாக இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர்கள் முத்துமாயன் மற்றும் சுந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், ராணுவ வீரரின் குடும்பத்தினர் மீது கொலைக்கான சந்தேகம் நிலவுவதாக தெரிய வந்தது. தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதே ஊரை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.