காதலிக்க மறுத்த இளம்பெண்... கத்தியால் குத்திய வாலிபர்...! தூத்துக்குடியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி பகுதியை சேர்ந்தவர் பிரிசிலா என்ற பிரியா(19). இவர் துணி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருமலைபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்ற வாலிபர் பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் பிரியாவிடம் தன்னை காதலிக்க கூறி அடிக்கடி தொல்லை கொடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முந்தின இரவு பிரியா வேலைக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது திருமலைபுரம் பகுதியில் ஆட்டோ வந்தபோது திடீரென ஆட்டோவை வழிமறித்த கருப்பசாமி, மீண்டும் பிரியாவை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திள்ளார். ஆனால் பிரியா காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கருப்பசாமி மறைத்து வைத்திருந்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கருப்பசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Youth stabbed the young girl who refused to love in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->