தட்டி கேட்டதால் ஆத்திரம்..அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த தம்பி!  - Seithipunal
Seithipunal


கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டி கேட்ட அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் தீபன், ஜாவித் ஆகிய 3 பேரும்  பேசிக்கொண்டிருந்த போது திடீரென அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை அவர்கள் மீது வீசியதில் முகேஷ் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்தார். 

மேலும் இந்த கும்பல் மற்ற இருவரையும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். இதில் தீபன் என்பவரின் கையில் வெடிகுண்டு பட்டதில் கை தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. மற்றொருவருக்கு தலையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் மருத்துவமனை வரும் வழியில் முகேஷ் என்பவர் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கை தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த தீபன் என்பவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்நிலையில் சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது.விசாரணையில் உயிரிழந்த முகேஷ் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்துள்ளார். இவரது தம்பி, ஜீவா.இந்நிலையில் முகேஷ் என் தம்பி ஜீவாவும் சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (19)-ம் நண்பர்களாக இருந்து கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அண்ணன் முகேஷ் அதை கண்டித்து ஆகாஷுடன் சேரவிடாமல் ஜீவாவை தன்னுடன் சிலிண்டர் போடும் பணிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் பேரம்பாக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த முகேஷ் மற்றும் அவனது நண்பர்கள் தீபன், ஜாவித் உள்ளிட்ட மூன்று பேர் மீது மூன்று நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.இதில் முகேஷ் மீது நாட்டு வெடிகுண்டு பட்டு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ்க்கும் ஆகாஷ் ஆகாஷ் சண்டை ஏற்ட்டதாகவும் அதில் ஆகாஷ் காதை முகேஷ் வெட்டியதும் தெரியவந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த  ஆகாஷ் பழிக்கு பழியாக கொலை செய்ததாகவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகாஷை காதை வெட்டிய சம்பவத்தில் ஜீவா உள்ளிட்ட இரண்டு பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி மப்பேடு உதவி ஆய்வாளர் மாலா தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு சம்பவ இடத்தில் உயிரிழந்த முகேஷ் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி மோப்பநாய் நிக்கி வரவழைக்கப்பட்டு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The younger brother who killed his elder brother with a bomb was provoked by a slap


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->