புதுக்கோட்டை: கர்ப்பிணியான காதலியை கழட்டி விட முயன்ற காதலன்., நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு...!! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணியான் காதலியை நீதிமன்ற வளாகத்திலேயே வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், வடக்குப்பட்டி  பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி. இவர் தனது தூரத்து உறவான ராம்கி என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை ராம்கி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனை காதலன் ராம்கியிடன் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார்.

ஆனால் ராம்கி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கஸ்தூரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

நீதிமன்றத்தில்  அவர் ஜாமீனில் வெளிவந்து கஸ்தூரியை திருமணம் செய்து கொள்வதாக கூறியிருந்தார். ஆனால், அவர் கஸ்தூரியை திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுமீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது அவர் கஸ்தூரியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருந்தார்.

இதனை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு ராம்கி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young man who married his girlfriend on the court premises


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->