புதிய தார் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி.. சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்!
The work of constructing a new road and drainage system has been inaugurated by the Speaker Selvam
மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் லலிதா நகர் பகுதியில் ரூபாய் 39.81 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை மற்றும் வடிகால் வசதி பணிகளை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள லலிதா நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதியில் உள்ள மக்கள் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் வசதி மற்றும் தார் சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுத்து முதல் கட்டமாக லலிதா நகர் பிரதான சாலை மற்றும் சில குறுக்கு வீதிகளில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை வசதிகளை ஏற்படுத்தி தந்தார்.
லலிதா நகர் விடுபட்ட வீதிகளுக்கும் கழிவு நீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை வசதி ஏற்படுத்த மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து நியமன சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் பி அசோக் பாபு அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 39.81 லட்சம் பெற்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பணிகளை தொடங்க அரசாணை பெற்று தந்தார்.
இதன்படி இப்பணிகளை துவங்கும் வகையில் பணிகளுக்கான பூமி பூஜை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் பி அசோக் பாபு ஆகியோர் முன்னிலையில் இன்று 18.06.2025 காலை லலிதா நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு ரமேஷ் உதவிப் பொறியாளர் நாகராஜ் இளநிலை பொறியாளர் அகிலன் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் சுகுமாரன் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மாவட்ட துணை தலைவர் மணி உள்ளிட்ட அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் செல்வம் கபிலன் சக்திவேல் கீர்த்திவாசன் மற்றும் அப்பகுதி பெண்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் புதிய தார் சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தி தந்த மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
English Summary
The work of constructing a new road and drainage system has been inaugurated by the Speaker Selvam