குடும்பத் தகராறில் கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி கைது.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி, கணவனின் தலையில் அம்மிக்கலை போட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் உரியூர் பகுதியை சேர்ந்தவர் சீராளன் (35). இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சீராளனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி குடும்பத்தில் கணவன்-மனைவியிடைய தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலையும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஷோபனா வீட்டில் இருந்த அம்மி கல்லை எடுத்து சீராளன் தலையில் போட்டுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சீராளன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து ஷோபனா, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்திற்கு சென்று, குடும்பத் தகராறில் தனது கணவரின் தலையில் அம்மி கல்லை போட்டு கொன்று விட்டதாக தெரிவித்து சரணடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஷோபனாவை கைது செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The wife killed her husband Due to family problem in ranipet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->