புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புதுடெல்லி புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்!
The Vice President of the Republic has left for New Delhi after completing the events in Puducherry
மூன்று நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் அவர்கள் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.
அரசு முறை பயணமாக புதுச்சேரி விமான நிலையத்திற்கு வருகை தந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை துணை நிலை ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
3 நாள் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வருகை தந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கழ், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் புதுச்சேரி விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்...
இதேபோல துணை ஜனாதிபதியை காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் காங்கிரஸ் சட்டமன்றத் கட்சி தலைவர் வைத்தியநாதன் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து ஜிப்மர் கலையரங்கில் மாணவர்களிடையெ குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் கலந்துரையாடினர்.
அதனை தொடர்ந்து அரசு முறைப் பயணமாக புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் ரங்கசாமி தனியார் உணவகத்தில் இரவு விருந்து அளித்தார்.
இந்தநிலையில் மூன்று நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் அவர்கள் புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று 17.06.2025 புதுடெல்லி புறப்பட்டபோது புதுச்சேரி விமான நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
English Summary
The Vice President of the Republic has left for New Delhi after completing the events in Puducherry