மழையில் விளையாட ஆசைப்பட்ட மகன்..தந்தை செய்த செயலால் அதிர்ந்த டெல்லி! - Seithipunal
Seithipunal


மழையில் விளையாட ஆசைப்பட்ட மகனை கத்தியால் குத்திக்கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் சாஹர்பூர் பகுதியை சேர்ந்த 40 வயதான கூலித்தொழிலாளி ஒருவருக்கு திருமணமாகி 4 பிள்ளைகள் இருந்தன. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் மனைவி உயிரிழந்த நிலையில் 4 பிள்ளைகளையும் தொழிலாளி வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் பெய்த மழையில் அந்த தொழிலாளியின் 10 வயது மகன்  விளையாட ஆசைப்பட்டுள்ளான். இது குறித்து தனது தந்தையிடம் கூறிய போது மழையில் நனையக்கூடாது என்று தந்தை கண்டித்துள்ளார்.

ஆனால், தந்தையின் பேச்சை கேட்காமல் மழையில் விளையாட ஆசைப்பட்ட சிறுவன் அடம்பிடித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் சிறுவனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து மகனை கத்தியால் குத்திக்கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The son who wished to play in the rainwas shocked by his father's actions in Delhi


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->