பதுக்கிய கைதுப்பாக்கிகள்! துரிதமாக சிக்கிய வட மாநில வாலிபர்கள்..!
Hoarded arrest weapons Northern State youths quickly caught
திருப்பூர் மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் எண்ணத்தில் மாநகர காவல் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.அதன் பேரில் காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வடமாநிலங்களிலிருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வீரபாண்டி குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பனியன் நிறுவனங்கள் மற்றும் கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் வீரபாண்டி காவல் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அச்சமயம் ஒரு வீட்டிற்குள் சென்று சோதனையிட்ட போது அங்கு 300 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அங்கிருந்த பையில் சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்ததுள்ளது. அதைக்கண்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.உடனே கஞ்சா, கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவலர்கள் அதனை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிராஜ் (வயது 25) மற்றும் ஜாகீர் அன்வர்(30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் துப்பாக்கிகள் குறித்து விசாரணை நடத்திய போது, பீகாரிலிருந்து ஒரு துப்பாக்கியை ரூ.6000 வாங்கி வந்து திருப்பூரில் ரூ.50000 -கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்கள் இதற்கு முன்பு திருப்பூரில் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளனரா, யாருக்கு விற்பனை செய்வதற்காக துப்பாக்கிகளை கொண்டு வந்தனர் என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,துப்பாக்கிகளுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Hoarded arrest weapons Northern State youths quickly caught