செயற்கை நுண்ணறிவு – நன்மையா? அல்லது நினைவாற்றலை மறைக்கும் ஒரு அபாயமா?மருத்துவர்கள் எச்சரிக்கை
Artificial Intelligence A Benefit Or a Danger That Hides Memory Doctors Warn
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது ஒரு சக்திவாய்ந்த சக்தியாக மாறியுள்ளது. கல்வி முதல் மருத்துவம் வரை, எல்லா துறைகளிலும் AI தனது பதிப்பை பதித்துள்ளது. ஆனால், இத்தகைய சக்தி நமக்கு நன்மைகளைக் கொடுக்கும் போதே சில மூளையை மந்தமாக்கும் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை மவுட்டன் போல் காட்டுகிறது புதிய ஆய்வுகள்.
“Cognitive Debt” என்றால் என்ன?
அமெரிக்காவின் MIT பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், AI பயன்பாடு அதிகரித்துவந்தபோதும், மனிதன் சிந்தனை செய்யும் திறன் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை "காக்னிட்டிவ் டெப்ட் (Cognitive Debt)" என அழைக்கின்றனர்.
அதாவது, ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளும் முன் அதன் விளக்கம் ஏற்கனவே கிடைத்துவிட்டால் – அதைக் குறித்து யோசிப்பதற்கோ, விசாரணை செய்வதற்கோ நாம் ஆர்வம் காட்டாமல் நேரடியாக பதிலை ஏற்றுக்கொள்கிறோம். இது மூளையின் செயல்பாட்டை நுணுக்கமாக பாதிக்கிறது.
MIT ஆய்வு என்ன சொல்கிறது?
அந்த ஆய்வில் மனிதர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர்:
-
சுயமாக சிந்தித்து எழுதுபவர்கள்
-
AI உதவியை முழுமையாக பயன்படுத்துபவர்கள்
-
தேவைக்கேற்ப தேடுபொறிகளை மட்டும் பயன்படுத்துபவர்கள்
இவர்கள் அனைவருக்கும் மூளை அலைகள் (EEG) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், AI மீது 100% நம்பிக்கை வைத்தவர்கள், என்ன எழுதினார்கள் என்பதே அவர்களுக்கே நினைவில் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
மாறாக, சுயமாக சிந்தித்து எழுதியவர்கள், 100% தெளிவுடன் பதிலளித்து, அவர்களின் நினைவாற்றலும், புரிதலும் மிக நன்றாக இருந்தது.
நியூரான்கள் – நினைவுக்கு அடித்தளம்!
நம்முடைய நியூரான்கள், தகவல்களை வைத்திருக்கவும், பகுப்பாய்வு செய்யவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் சிந்திக்கும் பொழுது இந்த நியூரான்களுக்கு இடையே தொடர்புகள் அதிகமாக உருவாகின்றன. ஆனால், AI உதவியுடன் சிந்திக்காமல் செயல்பட்டால், இந்த தொடர்புகள் மிகக் குறைவாகவே உருவாகின்றன.
இதனால்,
சிறுவர்கள் மற்றும் AI – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்!
இப்போது, மாணவர்கள் வீட்டுப்பாடங்களை AI உதவியுடன் முடிக்கிறார்கள். ஆனால், வீட்டுப்பாடம் என்பது பள்ளியில் கற்றதைக் மீண்டும் சிந்தித்து ஒட்டவைத்து, அதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்துவதே.
AI மூலமாக நேரடியாக பதிலை மட்டும் பெறும் போது, சிந்தனை நிகழ்வதற்கே வாய்ப்பு இல்லை. இதுவே சிறுவயதில் நினைவாற்றல் குறைவிற்கும், படிப்பின் மீது ஈர்ப்பு குறைவிற்கும் காரணமாகிறது.
தீர்வு என்ன?
செயற்கை நுண்ணறிவு என்பது தவறு இல்லை. ஆனால் அதை முழுமையாக சார்ந்துவிடுவது தான் முக்கிய பிரச்சனை.
-
முதலில் நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்
-
ஏதேனும் ஒரு முடிவுக்கு வர முயற்சிக்க வேண்டும்
-
பின்னரே AI உதவியை நாட வேண்டும்
இந்த முறையில் நாம் மூளையின் வளர்ச்சியையும், AI உதவியையும் சரியான சமநிலையில் வைத்திருக்க முடியும்.
முடிவுரை:
செயற்கை நுண்ணறிவு – மனிதனுக்கான மாபெரும் சக்தியாகவும், அபாயகரமான சோம்பலாகவும் மாறும். அதற்கான நிலையை தீர்மானிப்பது நாம் எப்படி அதை பயன்படுத்துகிறோம் என்பதே.
English Summary
Artificial Intelligence A Benefit Or a Danger That Hides Memory Doctors Warn