மதிப்பூதியம் உயர்வு  ஆணை..முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்! - Seithipunal
Seithipunal


சமூக வல்லுநர்கள், சமூக வள நபர்கள்  மதிப்பூதியம் உயர்வு ஆணைகளை  முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளிடம்  வழங்கினார்.

புதுச்சேரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநர்கள், சமூக வள நபர்கள்  மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் கடந்த 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில்,

(1) சமூக வல்லுநர்களுக்கான  தொகுப்பூதியம் ரூ.8000/-லிருந்து ரூ.15.000/-ஆகவும்;

(2) சமூக வள நபர்களுக்கான  தொகுப்பூதியம் ரூ.8000/-லிருந்து ரூ.13,500/-ஆகவும்:

(3) தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ள ரூ.8000/-லிருந்து ரூ.12,500/-ஆகவும்

இதற்கான ஆணையினை முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளிடம்  வழங்கினார். அப்போது, சபாநாயகர் செல்வம்.  வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர்  குலோத்துங்கன், ஆகியோர் உடனிருந்தனர்.

 


இதேபோல மத்திய அரசின் நிதி உதவி – உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  ரூ.10 லட்சம் உதவி வழங்கினார்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள ராஜாங்குளத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் அரவிந்த் (17) அண்மையில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கப்பட்டு  நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மத்திய அரசின் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் திட்டத்தின் கீழ், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முயற்சியின் மூலம் பெறப்பட்ட  ரூபாய் பத்து லட்சத்தை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The order for the elevation of the valuation authority was issued by Chief Minister Rangasamy


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->